Saturday 26 September 2015

தீயாக தீபம் திலீபன்

இந்திய ராணுவத்தின் ஈழத்து ஆக்கிரமிப்பை எதிர்த்து காந்தி வழியிலேயே உண்ணாநிலை போராட்டத்தை கையிலெடுத்து அவரது உயிரை விட்டார். விடுதலைப் புலிகள் ஆயுத வழியில் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடியதற்கு திலீபன் உதாரணம். அவரது நினைவாக இந்தக் கவிதை 

---------------------------------------------------------------------------------------------------------------- 
செங்கதிர் வீசக்கூசும்  மயிலோன் முகமுமதன்
பங்கானச் சித்திரக் கருவிழியு மதனாடியும்
சிங்களத்தைக் கூர்போடுஞ் சொல்லும் பல்லுமதன்
மஙகாத புன்னகையும தழகு

தங்கை  யரும்பாலகரும்  படுந்துயரா  லுந்தன்
தங்கை  யர்போல்  உள்நினைந்து ஈழத்து
மங்கை  யர்வாழ்வும்  தலைமுறையும்  சீர்தூக்கநீ
வேங்கை  யெனவிருப்பது விரம்

தங்க  மழைபொழியுந்  தென்பெருநில  முமதன்
வங்க  ஏரிக்கரை  செழித்தாட்சியு  மெவரோ
பங்கு  போடவந்தெ  மையழிக்கு  மதனால்நீ
சங்கென  முழங்குவது  பற்று

இந்தி  ரமைதிப்படை  யென்னும்  பெயரோடு
வந்தி  றங்கியதோர்  கூலிப்படை  யதுவோடுநீ
வெந்நி  றப்புறா  கொண்டழித்துக்  கூண்டோடு
சந்தி  சிரித்ததுவே  துணிவு

செங்கரும்புச்  சாறும்  செவ்வாழை  நறுந்தாரும்
நொங்குமதன் மேவும்  நன்மருந்தாகி  நெல்லியும்
மாங்கனியும்  நன்னீரும்  மருத்திருந்த நின்னை
தாங்கிய  தேகமது  தியாகம்

- குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர். 
--------------------------------------------------------------------------------------------------------



Saturday 27 June 2015

வெள்ளையம்மாவா? வெண்ணையா?



தமிழர்களுக்கு பெயர் வைத்தல் என்பது கொஞ்ச காலமாகவே ஒரு கிறுக்குத்தனமாகத்தான் இருக்கின்றது. சாதகம் பாத்து நியூமராலசி பாத்துத்தான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் வயதொத்த நண்பர்களுக்கே முக்கால்வாசி வடமொழிப் பெயர்கள். பிறகு எப்படி இப்போ பிறக்கின்ற குழந்தைகளுக்கு மட்டும் தமிழில் வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியும். ஆனால் நாமும் நாம் சார்ந்த குடும்பத்தில் இதை மாற்றமுடியும். அப்படி ஒன்றைத்தான் நான் என் நண்பர்கள் உறவினர் மத்தியில் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

Sunday 19 April 2015

மா.ANBALAGAN கதை



வைத்தியநாதனும் பெருமாளும் நேர் எதிர். ஆனால் ஒரே பள்ளியில் ஆசிரியராக பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கிறார்கள். ஏனோ அன்று பெருமாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை. தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்காக வைத்தி பெருமாளின் வகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது. வேண்டாவெறுப்பாக.

Saturday 11 April 2015

சரவணபெளகொளா - பயணப்பதிவு

கூட வேலை செய்பவரின் திருமணத்திற்காக சரவணபெளfகொளா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரு சமணர் என்பதால் சரவணபெளகொளாவில் அவரது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் பெல்காம். வட கருநாடகத்தைச் சார்ந்தவர். வரவேற்பை பெல்காமில் திருமணத்திற்குப் பிறகு வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். நான் இதை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி எனது இரு சக்கர வண்டியில் மொத்தமாக 350 கி.மீ தொலைவு ஓட்டவும் அந்தச் சமண தளத்தைப் பார்க்கவும் முடிவுசெய்தேன். அந்த முழு பயண அனுபவம்தான் இந்தப்பதிவு. 

Sunday 8 March 2015

யாது வேண்டின் பெண்ணுக்கு - மார்ச்சு 2015

உழைக்கும் மகளிர் நாளை முன்னிட்டு மகளிர் மீதான தவறான கூற்றுகளை உடைத்தெரிந்து எது உண்மை என்பதை விளங்க வைக்கத்தான் இந்தக் கவிதை. இளந்தமிழக இயக்கத்தின் "விசை" இணையதளத்தில் இந்தக் கவிதை வெளியிடப்பட்டது 
--------------------------------------------------------------------------------------------------------------------
அம்மி யோடுமதன் ஆட்டாங்கல் லோடும்
விம்மி மிகுவேலை புரிவார்க்குச் சொல்லில்லை
கணினி யோடுமதன் படிப்போடும் தன்னார்வமோடும்
பணியா லிவர்க்குக்கடுஞ் சொல்லே

திங்க ளொருமுறை வெடிக்குமண்டச் சிதைவால்
நீங்க ளென்றுமிங்கு தீட்டென்பாரிவரே இவ்வுலக
விண்ணு மதுதாண்டி வெடிக்குமண்டச் சிதைவை
தன்பே ரறிவென் றுரைப்பார்

துணையற்ற இளம்பெண்ணை விதவையென் பார்பொய்
வினையற்ற மெய்தன்னை வேற்றுடமை யென்பாரிவள்
மறுமணம் மறுத்துப்பல காரணஞ்சொல்லிக் கூத்தனின்
இருமணம் பேராண்மை யென்பார்

தாய்நா டென்பார் காவிரிபரணி யென்பார்தம்
தாய்மொ ழியென்பார் அம்மனுமவள் காளியென்பாராக
பெண்மை இகழ்பவர்சிறு நாவறுத்துக் கோடிபல
உண்மை புகழ்வதெம் செயல்

-    குட்டிமணி செங்குட்டுவன். 01-மார்ச்சு-2015

----------------------------------------------------------------------------------------------------------------------

Sunday 8 February 2015

அரை வாழைப்பழம்!

என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளில் இதுவுமொன்று. நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பச்சை நிற அரைக் கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும். எனது ஊரிலுள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றில்தான் படித்தேன். அரசு உதவி பெறும் பள்ளி. நூறு ஆண்டுகளைத்தாண்டி இன்றும் கல்விச்சேவை புரியும் பள்ளி. ஆண்கள் பள்ளி.

அன்றெல்லாம் விவரமே இல்லாத வயசு. எதெற்கெடுத்தாலும் கேள்விதான். யாராக இருந்தாலும் சரி. குறும்புத்தனம் அதிகம். எதைச்செய்யக் கூடாது என்கிறார்களோ அதைத்தான் செய்வேன் என்ற கொழுப்பு. கேட்டால் சின்னப்பையன் எனக்கென்ன தெரியும்? என்று மழுப்பல் வேறு. இன்று நான் இப்படி இருக்க முக்கியமான காரணங்களில் எனது பள்ளி வாழ்க்கை மிக முக்கியமானவொன்று.

Sunday 1 February 2015

மாதொருபாகன் - புதினம் ஒரு பார்வை


நூல் தலைப்பு   : மாதொருபாகன்
ஆசிரியர்           : பெருமாள் முருகன்
முதற்பதிப்பு     : டிசம்பர் - 2010
வெளியீடு         : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்          : 190
விலை                : ரூ - 140/-  

     
பொதுவாகவே நான் புதினங்கள் படிக்கும் பழக்கமில்லாதவன். ஆனால் ஒருபுறம் இந்துத்துவ அமைப்புகள் இந்தப் புத்தகத்தை எறிப்பதும் மறுபுறம் சாதிய அமைப்புகள் எழுத்தாளரை எதிர்ப்பதும் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவதும் என்னை இந்தப்புத்தகத்தைப் படிக்கத்தூண்டியது. இடையில் இந்தப் புதினத்தின் (நாவல்) ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் அவருடைய அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் பெருமாள் முருகன் இறந்துவிட்டதாகவும் இனி அவர் எதுவும் எழுதப்போவதில்லை எனவும் சாதாரண ஆசிரியராகவே இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒருசேரப் பார்க்கும் போது உண்மையில் அவர் அப்படி எதைத்தான் எழுதியுள்ளாரென்பதைத் தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றது. அந்தக்கதை பற்றியும் அதன் மூலம் எனது கருத்து என்னவென்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.

Saturday 24 January 2015

ஓதிமலை – பொங்கலுக்கு ஓர் பயணம்

ஓதிமலை அடிவாரத்திலிருந்து
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு நான் சென்ற ஒரு புது இடந்தான் இந்த ஓதிமலை. சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கின்ற முருகனின் கோவில்களில் மிக உயர்ந்த ஒன்று கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு படிக்கட்டுகளைக் கொண்டது. மலை உச்சியில் இருந்து பவானிசாகர் அணைக்கட்டு நன்றாகவே தெரியும்.  கிட்டத்தட்ட மூவாயிரம் அடிகள் உயரம் உள்ளது. மற்ற மலைகளைப்போல் அல்லாமல் சரியாக ஒரு கூம்பைக் கவிழ்த்தியது போலொரு அமைப்பு. மலையினது அடிவாரத்திலேயே உள்ள ஊர் கள்ளக்கரை. இவ்வூர் மக்களனைவரும் மாட்டுப் பொங்கலன்று பொழுது சாயும் வேலையில் கும்மியடிப்பார்கள். ஓதிமலையை முழுமையாக ஏறி இறங்கிய அனுபவம் பற்றியதுதான் இக்கட்டுரை.