Monday 8 August 2016

இடஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா?

வி பி சிங்
சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி 1990 ல் தான் விபிசிங் அவர்களால் மண்டல் கமிசனின் சாதிவாரியான இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுமண்டல் கமிசன் 1979ல் ஜனதா கட்சியின் மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்டது என்பது ஒரு கூடுதல் தகவல்.


விபிசிங் அதை நிறைவேற்றியபோது ஒருபுறம் அவரை தேவதூதராக பார்த்தவர்களும் அதே சமயம் அவரின் மண்டல் கமிசனின் இடஒதுக்கீட்டை எதிர்த்தும் பல போராட்டங்களும் வெளியே அதரிப்பதுபோலவும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் என அனைவரும் அடக்கம். என்ன இருந்தும் மண்டல் கமிசனின் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை அமல் படுத்திய சில மாதங்களிலேயே பாசக விபிசிங் அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரை விலக்கி அவரின் ஆட்சியை கவிழ்த்ததற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் உங்களது புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

Friday 24 June 2016

மதுக்கரை மகாராஜும் பராசக்தியும்

வனத்துறையால் கும்கி யானைகளின் உதவியோடு வண்டியில் ஏற்றப்பட்ட மதுக்கரை மகராஜ்
சமூக வலைதளம் .

விசித்திரம் நிறைந்த பல கருத்துக்களைச் சந்தித்திருக்கிறது. பல புதுமையான ஆட்களை அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால் இந்தக் கருத்தோ விசித்திரமானதும் அல்ல சொல்ல வந்த நானும் புதுமையானவனும் அல்ல. காட்டுப்பாதையிலே சாதாரணமாகத் தென்படக்கூடிய ஜீவன் தான் நான்.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தேன், விளைநிலங்களை நாசம் செய்தேன், இருவரைக் கொன்றேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை.

Tuesday 14 June 2016

கார்புரேட்களின் சாதி

சமீபத்தில் எனக்கொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பெங்களூரிலேயே. உலகளவில் கால்தடம் பதித்த பெரிய வாகன உற்பத்தியாளர்களில் முக்கியமானதும் கூட. பெங்களுர் வந்து அடுத்த மாதத்தோடு நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றது. வீட்டிலேயும் ஒரே நச்சு. திருமணத்திற்காக. ஆனால் எனக்கு மட்டுந்தான் தெரியும் இந்தக் காசெல்லாம் பத்தவே பத்தாது இத வெச்சுட்டு கல்யாணம் செய்தால் அடுத்த ஆறு மாதத்திலேயே விவாகரத்து தான். அதனால நானும் வேலை தேட ஆரம்பித்து ஒருவழியாக இந்த நிறுவனத்தில் வந்து நின்றேன்.  

Thursday 31 March 2016

ழகரம்

தொடுதிரையில் 53 என்ற மென்பொருளை வைத்து வரைந்தது. ழகரம் தமிழின் ஒரு உன்னதம்