Saturday 24 January 2015

ஓதிமலை – பொங்கலுக்கு ஓர் பயணம்

ஓதிமலை அடிவாரத்திலிருந்து
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு நான் சென்ற ஒரு புது இடந்தான் இந்த ஓதிமலை. சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கின்ற முருகனின் கோவில்களில் மிக உயர்ந்த ஒன்று கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு படிக்கட்டுகளைக் கொண்டது. மலை உச்சியில் இருந்து பவானிசாகர் அணைக்கட்டு நன்றாகவே தெரியும்.  கிட்டத்தட்ட மூவாயிரம் அடிகள் உயரம் உள்ளது. மற்ற மலைகளைப்போல் அல்லாமல் சரியாக ஒரு கூம்பைக் கவிழ்த்தியது போலொரு அமைப்பு. மலையினது அடிவாரத்திலேயே உள்ள ஊர் கள்ளக்கரை. இவ்வூர் மக்களனைவரும் மாட்டுப் பொங்கலன்று பொழுது சாயும் வேலையில் கும்மியடிப்பார்கள். ஓதிமலையை முழுமையாக ஏறி இறங்கிய அனுபவம் பற்றியதுதான் இக்கட்டுரை.