Monday 8 August 2016

இடஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா?

வி பி சிங்
சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி 1990 ல் தான் விபிசிங் அவர்களால் மண்டல் கமிசனின் சாதிவாரியான இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுமண்டல் கமிசன் 1979ல் ஜனதா கட்சியின் மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்டது என்பது ஒரு கூடுதல் தகவல்.


விபிசிங் அதை நிறைவேற்றியபோது ஒருபுறம் அவரை தேவதூதராக பார்த்தவர்களும் அதே சமயம் அவரின் மண்டல் கமிசனின் இடஒதுக்கீட்டை எதிர்த்தும் பல போராட்டங்களும் வெளியே அதரிப்பதுபோலவும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் என அனைவரும் அடக்கம். என்ன இருந்தும் மண்டல் கமிசனின் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை அமல் படுத்திய சில மாதங்களிலேயே பாசக விபிசிங் அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரை விலக்கி அவரின் ஆட்சியை கவிழ்த்ததற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் உங்களது புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.