Wednesday 30 April 2014

முகுந்து வரதராசன் - உயிரல்ல வரலாறு!

முகுந்து வரதராசன் அவரது மனைவி மற்றும் மகளுடன்
காச்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர். தன் மண்ணுக்காக தன் இன்னுயிரை ஈந்த மாமனிதர். நமக்காகவெல்லாம் தான் இவர் தன் உயிரை துச்சமென மதித்து களம் கண்டவர். வாழ்க இவரது வீரம் வாழ்க இவரது புகழ்!!!

என பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முகநூல்வாதிகளும் அயராமல் தங்களது அஞ்சலியை செலுத்தும் இவ்வேளையில் உங்களுள் எழாத ஒரு சில கேள்கள் என்னுள் எழவே செய்கிறது .

Saturday 19 April 2014

இடிந்தகரைப் பயணமும் போராட்டமும் – 1000வது நாள் !!

நண்பர்களுடன். இடமிருந்து சிரிதரன், முத்துலிங்கம், நான் மற்றும் அருள். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் படத்தினருகில்.

அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மே மாதம் 11ம் தேதியில் தனது ஆயிரமாவது நாளை எட்டுகின்றது. பலதரப்பட்ட தடைகளையும், போராட்டாங்களையும், அடக்கும்முறைகளையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்தியாகமும் செய்து இன்னமும் முன்பிருந்ததை விட பன்மடங்கு வீரியத்துடனும் போராட்டம் எந்த வன்முறையையும் சந்திக்காமல் நேர்மை குன்றாமல் 1000 வது நாளை எட்டும் இத்தருணம் நாம் அனைவரும் உற்று நோக்கவேண்டியது கடமை.

பல வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கும் இந்த போராட்டத்திற்குத்தான் இன்றளவும் விடை இல்லை. இவர்களது இந்த அறவழியிலான போராட்டம் என்று முடியும் ? கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் சாத்தியம்தானா? இவர்கள் இரண்டு ஆண்டுகளாக எப்படி தொடர்ந்து போராட முடிகிறது? இதனால் இவர்கள் பெற்றதுதான் என்ன ? என்ற கேள்விகள் எனக்குள்ளும் வந்ததுதான். அதன் விளைவாக இடிந்தகரைக்கே செல்ல எனக்கொரு வாய்ப்பு அமைந்தது.