Thursday 6 November 2014

தாதுமணல் கொள்ளை - முகிலன் ; புத்தகம் ஒர் பார்வை

நூல் தலைப்பு   : தாதுமணல் கொள்ளை
ஆசிரியர்           : முகிலன்
முதற்பதிப்பு     : ஏப்ரல் - 2014
வெளியீடு         : ஐந்திணை வெளியீட்டகம் 
பக்கங்கள்          : 192
விலை                : ரூ - 160/-

இந்நூல்
1996 இல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராட்டத்தில்  காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்நீத்த பெருமணல் கூட்டப்புளி சேசு அவர்களுக்கும், பல்வேறு அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராடி வரும் போராளிகளுக்கும்

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ம.தேவசகாயம், வழக்கறிஞர் மு.இராதாகிருட்டிணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் ம.க.சவாகிருல்லா ஆகியோர் அணிந்துரை எழுத திரு.முகிலன் அவர்களின் என்னுரையோடு ஆரம்பமாகின்றது இந்தப் புத்தகம்.

Saturday 11 October 2014

நாயின் புரட்சி !

2011 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம். ஐரோப்பிய கூட்டமைப்பை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் முடிவாக கிரேக்க நாட்டின் முதன்மைப் பிரதிநிதிகளோடு உலகலாவிய நாணய நிதியம் ( International Monetary Fund - IMF ) மற்றும் ஐரோப்பிய மைய வங்கி ( European Central Bank ) கூட்டு சேர்ந்து சில முடிவுகளெடுத்தன. அது அந்நாட்டு மக்களுக்கு விருப்பமில்லாத ஒரு முடிவாக அமையவே போராட்டங்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. அது ஒரு எழுச்சி மிகு போராட்டமாக அரசாங்கத்தை எதிர்த்த போராட்டமாக உருமாறி மக்கள் வீதிகளில் இறங்கினர். இதில் முக்கிய அம்சமாக விளங்கியதே அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய "லூகானிகாசு" ( Loukanikos ) என்ற நாய் தான். புரட்சி நாய் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. ஊடகங்களின் கவனத்தை வெகுவாய்க் கவர்ந்தவொன்று. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அது இயற்கை மரணம் தழுவிதையடுத்து அதற்காக இந்தக் கட்டுரையை காணிக்கையாக்குகின்றேன்.

Wednesday 27 August 2014

இப்படிக்கு தோழர் செங்கொடி


தோழர் செங்கொடி . .
மூவர் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட வீரமங்கை!
அவரது மூன்றாவது ஆண்டு நினைவுநாளாக 27-08-2014 அன்று அவரை நினைவு கூறும் விதமாக இந்தக் கவிதை.
-------------------------------------------------------------------------------------------------------------
இப்படிக்கு தோழர் செங்கொடி !! 

அற்ப  காரணமெல்லாந்  தவறெனக்  கூறிக்கொண்டு
சொற்ப  வாழ்வில்தன்  மகன்சிறையில்  வாடக்கண்டு
பொற்பா  தமிரண்டுங்  கொதித்தாற நீதிகோரச்சென்ற 
அற்பு  தம்மாளென்ற தெய்வமீதானை 

ஒற்றை  முழக்கங்கொண்டு  தாகந்தீர்ந்திட வேண்டி 
நேற்றைய  நிகழ்வுக்கெல்லாந்  தக்கமுடிவுரை  வேண்டி
பற்ற  வைத்ததேகமிப்  பெருவிடுதலை வேண்டி 
நற்ற  மிழானதென்  உயிரின்மீதானை

கற்ற  வரனைத்துமிங்  கெதுமெய்யென வுணர
பெற்ற  வர்தம்மக்கள்  விடுதலைவளியை  நுகர 
உற்ற  தெவராயிருப்பின்  மாண்டுபோவதுங்  குறைய 
மற்ற  வர்வாழ்வின்  மீதானை 

எப்படி  யேறியும்  சிறைக்கம்பிக  ளெறிவோம் 
இப்படி  யொருமுறை  மீண்டுமிங்கனு மதியோம்
எப்படி  யேனுமவன்  சகவிடுதலை  கொள்வோம் 
இப்படிக்கு தோழர்  செங்கொடி!! 

                            - குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர் 2014. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அவர் இறந்த பின்பும் அவரது எண்ணங்களை மறவாலும் மீண்டும் மீண்டும் அதை நினைவு கூறுவதாக இந்தக் கவிதை அமைந்திருக்கின்றது. 

Wednesday 23 July 2014

யார் அந்த “குட்டிமணி" ??


குட்டிமணி என்கிற செல்வராசா
யோகச்சந்திரன்
உங்கள் யாவருக்கும் இந்தப் பெயரைக் கேட்டால் உடனே எண்ணத்திற்கு வருவதென்னவோ பசங்க படத்தில் வரும் சின்னப் பையன் கதாபாத்திரம் தான். அந்த திரைப்படம் மட்டுமல்ல மீண்டுமொருமுறை கோலி சோடா என்ற படத்திலும் அதே பையன் அதே பெயரில் நடித்துள்ளார். அதைப் பார்த்து அந்தக் கதாபாத்திரம் செய்த நகைச்சுவைக்கும் பெயருக்கும் வாய்விட்டு சிரித்திருப்பீர்கள். இல்லாட்டியும் ஒரு கேளிக்கைக்குண்டான பெயராகத்தான் இருந்திருக்கும். இருக்கின்றது. அதுவும் ஏதே ஒரு இரட்டைப் பொருளோடு. இப்போது ஒருவன் குட்டிமணி என்ற பெயரை வைப்பாரானால் எதிர் நீச்சல் திரைப்படத்தில் வருவது போல தன்னை எல்லோரும் கேலி செய்கிறார்களென பெயரை மாற்றியிருப்பார். இது ஒன்றும் பெரிதல்ல என்கிறீர்களா? அந்தப் பெயரைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும்தான் இந்தக் கட்டுரை.

Thursday 17 July 2014

"ஜி" என்பதன் பின்னொட்டு வரலாறு



கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் இளம் தலைமுறையினர் எந்தத்திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்றே புரியாத புதிராக உள்ளது. நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதும் சரி நெருக்கமானவர்களை அழைக்கும் போதும் சரி டேய், மச்சி, மச்சா, மாமா மற்றும் மாப்ள என்று அழைப்பது வாடிக்கை. இன்னமும் அப்படித்தான். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக அதிகமாக இளைஞர்களிடத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை “ஜி”. வாங்க ஜி, சொல்லுங்க ஜி, அப்பிடி ஜி இப்புடி ஜி ஜி ஜி ஜி என இவர்கள் கூறுவது கேட்டு செவி அலுத்துவிட்டது. போதாகுறைக்கு திரைப்படங்களிலும் எறிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல. இந்த ஒற்றை எழுத்துச்சொல் யாருடையது? இதன் அர்த்தம் என்ன? இதை நாம் பயன்படுத்துவது சரிதானா? என்ற இத்துனை கேள்விகளுக்கும் அடிநாதம்தான் இந்தக் கட்டுரை.

Wednesday 30 April 2014

முகுந்து வரதராசன் - உயிரல்ல வரலாறு!

முகுந்து வரதராசன் அவரது மனைவி மற்றும் மகளுடன்
காச்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர். தன் மண்ணுக்காக தன் இன்னுயிரை ஈந்த மாமனிதர். நமக்காகவெல்லாம் தான் இவர் தன் உயிரை துச்சமென மதித்து களம் கண்டவர். வாழ்க இவரது வீரம் வாழ்க இவரது புகழ்!!!

என பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முகநூல்வாதிகளும் அயராமல் தங்களது அஞ்சலியை செலுத்தும் இவ்வேளையில் உங்களுள் எழாத ஒரு சில கேள்கள் என்னுள் எழவே செய்கிறது .

Saturday 19 April 2014

இடிந்தகரைப் பயணமும் போராட்டமும் – 1000வது நாள் !!

நண்பர்களுடன். இடமிருந்து சிரிதரன், முத்துலிங்கம், நான் மற்றும் அருள். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் படத்தினருகில்.

அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மே மாதம் 11ம் தேதியில் தனது ஆயிரமாவது நாளை எட்டுகின்றது. பலதரப்பட்ட தடைகளையும், போராட்டாங்களையும், அடக்கும்முறைகளையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்தியாகமும் செய்து இன்னமும் முன்பிருந்ததை விட பன்மடங்கு வீரியத்துடனும் போராட்டம் எந்த வன்முறையையும் சந்திக்காமல் நேர்மை குன்றாமல் 1000 வது நாளை எட்டும் இத்தருணம் நாம் அனைவரும் உற்று நோக்கவேண்டியது கடமை.

பல வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கும் இந்த போராட்டத்திற்குத்தான் இன்றளவும் விடை இல்லை. இவர்களது இந்த அறவழியிலான போராட்டம் என்று முடியும் ? கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் சாத்தியம்தானா? இவர்கள் இரண்டு ஆண்டுகளாக எப்படி தொடர்ந்து போராட முடிகிறது? இதனால் இவர்கள் பெற்றதுதான் என்ன ? என்ற கேள்விகள் எனக்குள்ளும் வந்ததுதான். அதன் விளைவாக இடிந்தகரைக்கே செல்ல எனக்கொரு வாய்ப்பு அமைந்தது.


Saturday 8 March 2014

பெண்


யாரவள் ? எதற்காக இந்தப் பாலினம் ? இந்த விசித்திரமான கேள்விகளுக்கு இதோ பதில் எனது கவிதையின் மூலம். பெண்ணியம் சார்ந்த கருத்தை விதைப்பது மட்டுமல்ல நமது கடமை பெண்ணியத்தை வாழவைப்பதும்தான்

இந்த வருடத்திலிருந்தாவது பெண்களுக்கு எதிரான வன்மங்களை எதிர்ப்போம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------


Sunday 2 February 2014

எதுதான் பெண் சுதந்திரம் ?

# வடகிழக்கு மாணவன் டெல்லியில் வாய்த்தகராறினால் பல பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்

# உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் சகோதரன் முன்னே பெண் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை

# மேற்குவங்கத்தில் வேறு இனத்தவனைக் காதலித்ததால் பஞ்சாயத்தின் தீர்ப்பின்படி பெண் பல பேரால் கற்பழிப்பு

# தொடர்ந்து தினந்தோறும் செய்திகளில் வந்துகொண்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுங் கொடுமைகளுஞ் சொல்லி மாலாது

இப்படியிருக்கையில் ஒரு சாதாரண தமையனாய் தகப்பனாய் கணவனாய் எப்படி ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணை இந்தச் சமூகவெளியில் அனுப்ப எத்தனிப்பான் ?? நீங்கள் படித்துப் பட்டம் வாங்காவிட்டாலும் பரவாயில்லை, பெண் வேலைக்குப்போய்தான் குடும்பம் கஞ்சி குடிக்காவிட்டாலும் பரவாயில்லை நீதான் முக்கியமென வீட்டிலேயே இருக்கச் சொல்லும் அத்துனை அப்பாக்களின் அண்ணன்களின் பாசத்தை கொச்சைப்படுத்தும் பெண்ணியவாதிகளே இப்போது புரியும் இத்தனைக் கொடுமைகளுக்கும் அடுப்பங்கரையைக் காட்டிலும் வேறுபாதுகாப்பு இருக்கவேமுடியாதென்று.

பெண்ணின் முன்னேற்றத்தை தடுப்பவர்களல்ல நாங்கள். கண்ணகி என்ற பெண்ணுக்காக நீண்ட காவியம் வரைந்தவர்கள் நாம். அவ்வைபோலொரு சிறந்த பெண்கவி இருந்ததில்லை இவ்வுலகில். ஆணுக்கு நிகராக களத்தில் எதிரியை பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடச் செய்தனர் ஈழத்தின் எம்பெண் போராளிகள். முல்லைக்குத் தேரும் மயிலுக்கு போர்வையும் கொடுத்த எமக்கு பெண்ணுக்கு என்ன கொடுக்கவேண்டும் எனத் தெறியாமல் இருக்குமோ?

நாகரிகம் வளர்ந்துகொண்டே இருக்கும் இக்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நெஞ்சைக் கிழிக்கிறது. இவ்வளவு நடந்தும் எந்தப்பெண்ணும்(பெருவாரியாக) இதைப்பற்றி சமூகவலைத்தளங்களில் கோபப்பட்டு எழுதியதாகத் தெறியவில்லை. நடிகைகளின் படங்களைப் போடுவதே இவர்களுக்குப் பிழைப்பாகிப்போனது.

இப்போதும் சொல்கிறேன் பெண்களுக்கான வன்மங்கள் குறையும்வரை நாங்கள் உங்களின் மீதான அக்கறையில் உங்களைச் சில கட்டுப்பாட்டில் இருக்கச்சொல்வதை இனிமேலும் பெண்ணடிமை எனக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

கோபத்தின் விளிம்பில்