பெலந்தூர் ரோட் நிறுத்ததில் நான் |
நான் வேலை செய்த நிறுவனத்தில் இரு நேர பணியாகப் பிரித்து வைத்திருப்பார்கள். காலை ஆறு முதல் மாலை மூன்று வரை. அடுத்து மாலை மூன்று முதல் இரவு பன்னிரண்டு வரை. தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஒரே நேரத்தை கடை பிடிக்கனும். ஆக எப்போதெல்லாம் காலை நேர வேலைக்குப் போகிறோமோ அப்பொழுதெல்லாம் வார இறுதி நாட்களில் ஊருக்குப் போவது மிக எளிது. அதும் நூறு ரூபாயில். கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்குமே. ஆனால் அந்த மூன்று ஆண்டுகளின் அனுபவத்தைப் பற்றியதுதான் இக்கட்டுரை.