2011 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம். ஐரோப்பிய கூட்டமைப்பை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் முடிவாக கிரேக்க நாட்டின் முதன்மைப் பிரதிநிதிகளோடு உலகலாவிய நாணய நிதியம் ( International Monetary Fund - IMF ) மற்றும் ஐரோப்பிய மைய வங்கி ( European Central Bank ) கூட்டு சேர்ந்து சில முடிவுகளெடுத்தன. அது அந்நாட்டு மக்களுக்கு விருப்பமில்லாத ஒரு முடிவாக அமையவே போராட்டங்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. அது ஒரு எழுச்சி மிகு போராட்டமாக அரசாங்கத்தை எதிர்த்த போராட்டமாக உருமாறி மக்கள் வீதிகளில் இறங்கினர். இதில் முக்கிய அம்சமாக விளங்கியதே அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய "லூகானிகாசு" ( Loukanikos ) என்ற நாய் தான். புரட்சி நாய் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. ஊடகங்களின் கவனத்தை வெகுவாய்க் கவர்ந்தவொன்று. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அது இயற்கை மரணம் தழுவிதையடுத்து அதற்காக இந்தக் கட்டுரையை காணிக்கையாக்குகின்றேன்.