Saturday 5 October 2013

கற்றுக்கொண்ட பாடங்கள்

முகநூலில் கடந்த சில நாட்களாய் சனநாயக நாடகாக இருந்தாலும் ராசா ராணியைப் போற்றித்தள்ளுகிறார்கள். அப்படி எந்த ராசா ராணி என்று உள்ளம் கேட்கலாம். ஆமாம் அதே ராசா ராணிதான்.

ஒரு லிட்டர் தண்ணீரை 20 ரூபாய்க்கு குடிக்கும் இவர்கள் அதே 20 க்கோ அல்லது 15 க்கோ ஒரு இளநீர் வாங்கிக் குடிக்காத கூட்டம். இவர்கள் போற்றித்தள்ளுகிறார்கள் என்றால் நான் கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம். ம்ம் அது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நான் சொல்ல நினைத்ததென்னவோ கற்றுக்கொண்டதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதைப் பற்றி.

கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஏதோ என் சொந்த ஊரில் கொஞ்ச கன்னடரும், கொஞ்ச தெலுங்கரும், நிறைய வடநாட்டவரும் இருப்பது போலத்தான் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் கர்நாடக மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி தமிழ் மக்கள் தாம். அதாவது மொத்த ஐந்தரைக் கோடியில் ஒரு கோடிக்கும் மேலாக தமிழ் மக்கள்தான். ஆனால் தொகையில் குறைவாக உள்ள கேரள மக்களில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஒரு தமிழர் கூடக்கிடையாது.

Tuesday 1 October 2013