என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளில் இதுவுமொன்று. நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பச்சை நிற அரைக் கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும். எனது ஊரிலுள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றில்தான் படித்தேன். அரசு உதவி பெறும் பள்ளி. நூறு ஆண்டுகளைத்தாண்டி இன்றும் கல்விச்சேவை புரியும் பள்ளி. ஆண்கள் பள்ளி.
அன்றெல்லாம் விவரமே இல்லாத வயசு. எதெற்கெடுத்தாலும் கேள்விதான். யாராக இருந்தாலும் சரி. குறும்புத்தனம் அதிகம். எதைச்செய்யக் கூடாது என்கிறார்களோ அதைத்தான் செய்வேன் என்ற கொழுப்பு. கேட்டால் சின்னப்பையன் எனக்கென்ன தெரியும்? என்று மழுப்பல் வேறு. இன்று நான் இப்படி இருக்க முக்கியமான காரணங்களில் எனது பள்ளி வாழ்க்கை மிக முக்கியமானவொன்று.
அன்றெல்லாம் விவரமே இல்லாத வயசு. எதெற்கெடுத்தாலும் கேள்விதான். யாராக இருந்தாலும் சரி. குறும்புத்தனம் அதிகம். எதைச்செய்யக் கூடாது என்கிறார்களோ அதைத்தான் செய்வேன் என்ற கொழுப்பு. கேட்டால் சின்னப்பையன் எனக்கென்ன தெரியும்? என்று மழுப்பல் வேறு. இன்று நான் இப்படி இருக்க முக்கியமான காரணங்களில் எனது பள்ளி வாழ்க்கை மிக முக்கியமானவொன்று.