தமிழர்களுக்கு
பெயர் வைத்தல் என்பது கொஞ்ச காலமாகவே ஒரு கிறுக்குத்தனமாகத்தான் இருக்கின்றது. சாதகம்
பாத்து நியூமராலசி பாத்துத்தான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் வயதொத்த நண்பர்களுக்கே
முக்கால்வாசி வடமொழிப் பெயர்கள். பிறகு எப்படி இப்போ பிறக்கின்ற குழந்தைகளுக்கு மட்டும்
தமிழில் வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியும். ஆனால் நாமும் நாம் சார்ந்த குடும்பத்தில்
இதை மாற்றமுடியும். அப்படி ஒன்றைத்தான் நான் என் நண்பர்கள் உறவினர் மத்தியில் நடத்திக்கொண்டிருக்கிறேன்.