வனத்துறையால் கும்கி யானைகளின் உதவியோடு வண்டியில் ஏற்றப்பட்ட மதுக்கரை மகராஜ் |
சமூக
வலைதளம் .
விசித்திரம்
நிறைந்த பல கருத்துக்களைச் சந்தித்திருக்கிறது. பல புதுமையான ஆட்களை அடையாளம் காட்டியிருக்கிறது.
ஆனால் இந்தக் கருத்தோ விசித்திரமானதும் அல்ல சொல்ல வந்த நானும் புதுமையானவனும் அல்ல.
காட்டுப்பாதையிலே சாதாரணமாகத் தென்படக்கூடிய ஜீவன் தான் நான்.
ஊருக்குள்
புகுந்து அட்டகாசம் செய்தேன், விளைநிலங்களை நாசம் செய்தேன், இருவரைக் கொன்றேன். குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள்
எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை.