Saturday, 1 July 2017

நூறு ரூபாய் பயணம் | பெங்களூர் முதல் கோபி வரை

பெலந்தூர் ரோட் நிறுத்ததில் நான்
படித்தோம் முடித்தோம் வேலை கிடச்சுது. இப்படித்தான் என் வாழ்க்கையும். 2012ல் பொறியியல் படிப்பு முடிக்கவும் வேலை கிடைக்கவும் சரியாக இருந்தது. கல்லூரி முடித்த கையோடு பெங்களூர் போய் வேலையில் சேந்தாச்சு. கைநிறைய சம்பளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருக்க உண்ண போகவர இதுக்கே அவ்வளவும் சரியாக இருக்கும்.

நான் வேலை செய்த நிறுவனத்தில் இரு நேர பணியாகப் பிரித்து வைத்திருப்பார்கள். காலை ஆறு முதல் மாலை மூன்று வரை. அடுத்து மாலை மூன்று முதல் இரவு பன்னிரண்டு வரை. தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஒரே நேரத்தை கடை பிடிக்கனும். ஆக எப்போதெல்லாம் காலை நேர வேலைக்குப் போகிறோமோ அப்பொழுதெல்லாம் வார இறுதி நாட்களில் ஊருக்குப் போவது மிக எளிது. அதும் நூறு ரூபாயில். கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்குமே. ஆனால் அந்த மூன்று ஆண்டுகளின் அனுபவத்தைப் பற்றியதுதான் இக்கட்டுரை.

Monday, 8 August 2016

இடஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா?

வி பி சிங்
சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி 1990 ல் தான் விபிசிங் அவர்களால் மண்டல் கமிசனின் சாதிவாரியான இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுமண்டல் கமிசன் 1979ல் ஜனதா கட்சியின் மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்டது என்பது ஒரு கூடுதல் தகவல்.


விபிசிங் அதை நிறைவேற்றியபோது ஒருபுறம் அவரை தேவதூதராக பார்த்தவர்களும் அதே சமயம் அவரின் மண்டல் கமிசனின் இடஒதுக்கீட்டை எதிர்த்தும் பல போராட்டங்களும் வெளியே அதரிப்பதுபோலவும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் என அனைவரும் அடக்கம். என்ன இருந்தும் மண்டல் கமிசனின் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை அமல் படுத்திய சில மாதங்களிலேயே பாசக விபிசிங் அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரை விலக்கி அவரின் ஆட்சியை கவிழ்த்ததற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் உங்களது புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

Friday, 24 June 2016

மதுக்கரை மகாராஜும் பராசக்தியும்

வனத்துறையால் கும்கி யானைகளின் உதவியோடு வண்டியில் ஏற்றப்பட்ட மதுக்கரை மகராஜ்
சமூக வலைதளம் .

விசித்திரம் நிறைந்த பல கருத்துக்களைச் சந்தித்திருக்கிறது. பல புதுமையான ஆட்களை அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால் இந்தக் கருத்தோ விசித்திரமானதும் அல்ல சொல்ல வந்த நானும் புதுமையானவனும் அல்ல. காட்டுப்பாதையிலே சாதாரணமாகத் தென்படக்கூடிய ஜீவன் தான் நான்.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தேன், விளைநிலங்களை நாசம் செய்தேன், இருவரைக் கொன்றேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை.

Tuesday, 14 June 2016

கார்புரேட்களின் சாதி

சமீபத்தில் எனக்கொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பெங்களூரிலேயே. உலகளவில் கால்தடம் பதித்த பெரிய வாகன உற்பத்தியாளர்களில் முக்கியமானதும் கூட. பெங்களுர் வந்து அடுத்த மாதத்தோடு நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றது. வீட்டிலேயும் ஒரே நச்சு. திருமணத்திற்காக. ஆனால் எனக்கு மட்டுந்தான் தெரியும் இந்தக் காசெல்லாம் பத்தவே பத்தாது இத வெச்சுட்டு கல்யாணம் செய்தால் அடுத்த ஆறு மாதத்திலேயே விவாகரத்து தான். அதனால நானும் வேலை தேட ஆரம்பித்து ஒருவழியாக இந்த நிறுவனத்தில் வந்து நின்றேன்.  

Thursday, 31 March 2016

ழகரம்

தொடுதிரையில் 53 என்ற மென்பொருளை வைத்து வரைந்தது. ழகரம் தமிழின் ஒரு உன்னதம்

Saturday, 26 September 2015

தீயாக தீபம் திலீபன்

இந்திய ராணுவத்தின் ஈழத்து ஆக்கிரமிப்பை எதிர்த்து காந்தி வழியிலேயே உண்ணாநிலை போராட்டத்தை கையிலெடுத்து அவரது உயிரை விட்டார். விடுதலைப் புலிகள் ஆயுத வழியில் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடியதற்கு திலீபன் உதாரணம். அவரது நினைவாக இந்தக் கவிதை 

---------------------------------------------------------------------------------------------------------------- 
செங்கதிர் வீசக்கூசும்  மயிலோன் முகமுமதன்
பங்கானச் சித்திரக் கருவிழியு மதனாடியும்
சிங்களத்தைக் கூர்போடுஞ் சொல்லும் பல்லுமதன்
மஙகாத புன்னகையும தழகு

தங்கை  யரும்பாலகரும்  படுந்துயரா  லுந்தன்
தங்கை  யர்போல்  உள்நினைந்து ஈழத்து
மங்கை  யர்வாழ்வும்  தலைமுறையும்  சீர்தூக்கநீ
வேங்கை  யெனவிருப்பது விரம்

தங்க  மழைபொழியுந்  தென்பெருநில  முமதன்
வங்க  ஏரிக்கரை  செழித்தாட்சியு  மெவரோ
பங்கு  போடவந்தெ  மையழிக்கு  மதனால்நீ
சங்கென  முழங்குவது  பற்று

இந்தி  ரமைதிப்படை  யென்னும்  பெயரோடு
வந்தி  றங்கியதோர்  கூலிப்படை  யதுவோடுநீ
வெந்நி  றப்புறா  கொண்டழித்துக்  கூண்டோடு
சந்தி  சிரித்ததுவே  துணிவு

செங்கரும்புச்  சாறும்  செவ்வாழை  நறுந்தாரும்
நொங்குமதன் மேவும்  நன்மருந்தாகி  நெல்லியும்
மாங்கனியும்  நன்னீரும்  மருத்திருந்த நின்னை
தாங்கிய  தேகமது  தியாகம்

- குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர். 
--------------------------------------------------------------------------------------------------------



Saturday, 27 June 2015

வெள்ளையம்மாவா? வெண்ணையா?



தமிழர்களுக்கு பெயர் வைத்தல் என்பது கொஞ்ச காலமாகவே ஒரு கிறுக்குத்தனமாகத்தான் இருக்கின்றது. சாதகம் பாத்து நியூமராலசி பாத்துத்தான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் வயதொத்த நண்பர்களுக்கே முக்கால்வாசி வடமொழிப் பெயர்கள். பிறகு எப்படி இப்போ பிறக்கின்ற குழந்தைகளுக்கு மட்டும் தமிழில் வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியும். ஆனால் நாமும் நாம் சார்ந்த குடும்பத்தில் இதை மாற்றமுடியும். அப்படி ஒன்றைத்தான் நான் என் நண்பர்கள் உறவினர் மத்தியில் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

Sunday, 19 April 2015

மா.ANBALAGAN கதை



வைத்தியநாதனும் பெருமாளும் நேர் எதிர். ஆனால் ஒரே பள்ளியில் ஆசிரியராக பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கிறார்கள். ஏனோ அன்று பெருமாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை. தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்காக வைத்தி பெருமாளின் வகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது. வேண்டாவெறுப்பாக.

Saturday, 11 April 2015

சரவணபெளகொளா - பயணப்பதிவு

கூட வேலை செய்பவரின் திருமணத்திற்காக சரவணபெளfகொளா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரு சமணர் என்பதால் சரவணபெளகொளாவில் அவரது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் பெல்காம். வட கருநாடகத்தைச் சார்ந்தவர். வரவேற்பை பெல்காமில் திருமணத்திற்குப் பிறகு வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். நான் இதை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி எனது இரு சக்கர வண்டியில் மொத்தமாக 350 கி.மீ தொலைவு ஓட்டவும் அந்தச் சமண தளத்தைப் பார்க்கவும் முடிவுசெய்தேன். அந்த முழு பயண அனுபவம்தான் இந்தப்பதிவு. 

Sunday, 8 March 2015

யாது வேண்டின் பெண்ணுக்கு - மார்ச்சு 2015

உழைக்கும் மகளிர் நாளை முன்னிட்டு மகளிர் மீதான தவறான கூற்றுகளை உடைத்தெரிந்து எது உண்மை என்பதை விளங்க வைக்கத்தான் இந்தக் கவிதை. இளந்தமிழக இயக்கத்தின் "விசை" இணையதளத்தில் இந்தக் கவிதை வெளியிடப்பட்டது 
--------------------------------------------------------------------------------------------------------------------
அம்மி யோடுமதன் ஆட்டாங்கல் லோடும்
விம்மி மிகுவேலை புரிவார்க்குச் சொல்லில்லை
கணினி யோடுமதன் படிப்போடும் தன்னார்வமோடும்
பணியா லிவர்க்குக்கடுஞ் சொல்லே

திங்க ளொருமுறை வெடிக்குமண்டச் சிதைவால்
நீங்க ளென்றுமிங்கு தீட்டென்பாரிவரே இவ்வுலக
விண்ணு மதுதாண்டி வெடிக்குமண்டச் சிதைவை
தன்பே ரறிவென் றுரைப்பார்

துணையற்ற இளம்பெண்ணை விதவையென் பார்பொய்
வினையற்ற மெய்தன்னை வேற்றுடமை யென்பாரிவள்
மறுமணம் மறுத்துப்பல காரணஞ்சொல்லிக் கூத்தனின்
இருமணம் பேராண்மை யென்பார்

தாய்நா டென்பார் காவிரிபரணி யென்பார்தம்
தாய்மொ ழியென்பார் அம்மனுமவள் காளியென்பாராக
பெண்மை இகழ்பவர்சிறு நாவறுத்துக் கோடிபல
உண்மை புகழ்வதெம் செயல்

-    குட்டிமணி செங்குட்டுவன். 01-மார்ச்சு-2015

----------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 8 February 2015

அரை வாழைப்பழம்!

என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளில் இதுவுமொன்று. நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பச்சை நிற அரைக் கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும். எனது ஊரிலுள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றில்தான் படித்தேன். அரசு உதவி பெறும் பள்ளி. நூறு ஆண்டுகளைத்தாண்டி இன்றும் கல்விச்சேவை புரியும் பள்ளி. ஆண்கள் பள்ளி.

அன்றெல்லாம் விவரமே இல்லாத வயசு. எதெற்கெடுத்தாலும் கேள்விதான். யாராக இருந்தாலும் சரி. குறும்புத்தனம் அதிகம். எதைச்செய்யக் கூடாது என்கிறார்களோ அதைத்தான் செய்வேன் என்ற கொழுப்பு. கேட்டால் சின்னப்பையன் எனக்கென்ன தெரியும்? என்று மழுப்பல் வேறு. இன்று நான் இப்படி இருக்க முக்கியமான காரணங்களில் எனது பள்ளி வாழ்க்கை மிக முக்கியமானவொன்று.

Sunday, 1 February 2015

மாதொருபாகன் - புதினம் ஒரு பார்வை


நூல் தலைப்பு   : மாதொருபாகன்
ஆசிரியர்           : பெருமாள் முருகன்
முதற்பதிப்பு     : டிசம்பர் - 2010
வெளியீடு         : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்          : 190
விலை                : ரூ - 140/-  

     
பொதுவாகவே நான் புதினங்கள் படிக்கும் பழக்கமில்லாதவன். ஆனால் ஒருபுறம் இந்துத்துவ அமைப்புகள் இந்தப் புத்தகத்தை எறிப்பதும் மறுபுறம் சாதிய அமைப்புகள் எழுத்தாளரை எதிர்ப்பதும் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவதும் என்னை இந்தப்புத்தகத்தைப் படிக்கத்தூண்டியது. இடையில் இந்தப் புதினத்தின் (நாவல்) ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் அவருடைய அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் பெருமாள் முருகன் இறந்துவிட்டதாகவும் இனி அவர் எதுவும் எழுதப்போவதில்லை எனவும் சாதாரண ஆசிரியராகவே இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒருசேரப் பார்க்கும் போது உண்மையில் அவர் அப்படி எதைத்தான் எழுதியுள்ளாரென்பதைத் தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றது. அந்தக்கதை பற்றியும் அதன் மூலம் எனது கருத்து என்னவென்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.

Saturday, 24 January 2015

ஓதிமலை – பொங்கலுக்கு ஓர் பயணம்

ஓதிமலை அடிவாரத்திலிருந்து
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு நான் சென்ற ஒரு புது இடந்தான் இந்த ஓதிமலை. சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கின்ற முருகனின் கோவில்களில் மிக உயர்ந்த ஒன்று கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு படிக்கட்டுகளைக் கொண்டது. மலை உச்சியில் இருந்து பவானிசாகர் அணைக்கட்டு நன்றாகவே தெரியும்.  கிட்டத்தட்ட மூவாயிரம் அடிகள் உயரம் உள்ளது. மற்ற மலைகளைப்போல் அல்லாமல் சரியாக ஒரு கூம்பைக் கவிழ்த்தியது போலொரு அமைப்பு. மலையினது அடிவாரத்திலேயே உள்ள ஊர் கள்ளக்கரை. இவ்வூர் மக்களனைவரும் மாட்டுப் பொங்கலன்று பொழுது சாயும் வேலையில் கும்மியடிப்பார்கள். ஓதிமலையை முழுமையாக ஏறி இறங்கிய அனுபவம் பற்றியதுதான் இக்கட்டுரை. 

Thursday, 6 November 2014

தாதுமணல் கொள்ளை - முகிலன் ; புத்தகம் ஒர் பார்வை

நூல் தலைப்பு   : தாதுமணல் கொள்ளை
ஆசிரியர்           : முகிலன்
முதற்பதிப்பு     : ஏப்ரல் - 2014
வெளியீடு         : ஐந்திணை வெளியீட்டகம் 
பக்கங்கள்          : 192
விலை                : ரூ - 160/-

இந்நூல்
1996 இல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராட்டத்தில்  காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்நீத்த பெருமணல் கூட்டப்புளி சேசு அவர்களுக்கும், பல்வேறு அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராடி வரும் போராளிகளுக்கும்

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ம.தேவசகாயம், வழக்கறிஞர் மு.இராதாகிருட்டிணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் ம.க.சவாகிருல்லா ஆகியோர் அணிந்துரை எழுத திரு.முகிலன் அவர்களின் என்னுரையோடு ஆரம்பமாகின்றது இந்தப் புத்தகம்.

Saturday, 11 October 2014

நாயின் புரட்சி !

2011 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம். ஐரோப்பிய கூட்டமைப்பை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் முடிவாக கிரேக்க நாட்டின் முதன்மைப் பிரதிநிதிகளோடு உலகலாவிய நாணய நிதியம் ( International Monetary Fund - IMF ) மற்றும் ஐரோப்பிய மைய வங்கி ( European Central Bank ) கூட்டு சேர்ந்து சில முடிவுகளெடுத்தன. அது அந்நாட்டு மக்களுக்கு விருப்பமில்லாத ஒரு முடிவாக அமையவே போராட்டங்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. அது ஒரு எழுச்சி மிகு போராட்டமாக அரசாங்கத்தை எதிர்த்த போராட்டமாக உருமாறி மக்கள் வீதிகளில் இறங்கினர். இதில் முக்கிய அம்சமாக விளங்கியதே அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய "லூகானிகாசு" ( Loukanikos ) என்ற நாய் தான். புரட்சி நாய் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. ஊடகங்களின் கவனத்தை வெகுவாய்க் கவர்ந்தவொன்று. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அது இயற்கை மரணம் தழுவிதையடுத்து அதற்காக இந்தக் கட்டுரையை காணிக்கையாக்குகின்றேன்.

Wednesday, 27 August 2014

இப்படிக்கு தோழர் செங்கொடி


தோழர் செங்கொடி . .
மூவர் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட வீரமங்கை!
அவரது மூன்றாவது ஆண்டு நினைவுநாளாக 27-08-2014 அன்று அவரை நினைவு கூறும் விதமாக இந்தக் கவிதை.
-------------------------------------------------------------------------------------------------------------
இப்படிக்கு தோழர் செங்கொடி !! 

அற்ப  காரணமெல்லாந்  தவறெனக்  கூறிக்கொண்டு
சொற்ப  வாழ்வில்தன்  மகன்சிறையில்  வாடக்கண்டு
பொற்பா  தமிரண்டுங்  கொதித்தாற நீதிகோரச்சென்ற 
அற்பு  தம்மாளென்ற தெய்வமீதானை 

ஒற்றை  முழக்கங்கொண்டு  தாகந்தீர்ந்திட வேண்டி 
நேற்றைய  நிகழ்வுக்கெல்லாந்  தக்கமுடிவுரை  வேண்டி
பற்ற  வைத்ததேகமிப்  பெருவிடுதலை வேண்டி 
நற்ற  மிழானதென்  உயிரின்மீதானை

கற்ற  வரனைத்துமிங்  கெதுமெய்யென வுணர
பெற்ற  வர்தம்மக்கள்  விடுதலைவளியை  நுகர 
உற்ற  தெவராயிருப்பின்  மாண்டுபோவதுங்  குறைய 
மற்ற  வர்வாழ்வின்  மீதானை 

எப்படி  யேறியும்  சிறைக்கம்பிக  ளெறிவோம் 
இப்படி  யொருமுறை  மீண்டுமிங்கனு மதியோம்
எப்படி  யேனுமவன்  சகவிடுதலை  கொள்வோம் 
இப்படிக்கு தோழர்  செங்கொடி!! 

                            - குட்டிமணி செங்குட்டுவன், பெங்களூர் 2014. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அவர் இறந்த பின்பும் அவரது எண்ணங்களை மறவாலும் மீண்டும் மீண்டும் அதை நினைவு கூறுவதாக இந்தக் கவிதை அமைந்திருக்கின்றது. 

Wednesday, 23 July 2014

யார் அந்த “குட்டிமணி" ??


குட்டிமணி என்கிற செல்வராசா
யோகச்சந்திரன்
உங்கள் யாவருக்கும் இந்தப் பெயரைக் கேட்டால் உடனே எண்ணத்திற்கு வருவதென்னவோ பசங்க படத்தில் வரும் சின்னப் பையன் கதாபாத்திரம் தான். அந்த திரைப்படம் மட்டுமல்ல மீண்டுமொருமுறை கோலி சோடா என்ற படத்திலும் அதே பையன் அதே பெயரில் நடித்துள்ளார். அதைப் பார்த்து அந்தக் கதாபாத்திரம் செய்த நகைச்சுவைக்கும் பெயருக்கும் வாய்விட்டு சிரித்திருப்பீர்கள். இல்லாட்டியும் ஒரு கேளிக்கைக்குண்டான பெயராகத்தான் இருந்திருக்கும். இருக்கின்றது. அதுவும் ஏதே ஒரு இரட்டைப் பொருளோடு. இப்போது ஒருவன் குட்டிமணி என்ற பெயரை வைப்பாரானால் எதிர் நீச்சல் திரைப்படத்தில் வருவது போல தன்னை எல்லோரும் கேலி செய்கிறார்களென பெயரை மாற்றியிருப்பார். இது ஒன்றும் பெரிதல்ல என்கிறீர்களா? அந்தப் பெயரைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும்தான் இந்தக் கட்டுரை.

Thursday, 17 July 2014

"ஜி" என்பதன் பின்னொட்டு வரலாறு



கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் இளம் தலைமுறையினர் எந்தத்திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்றே புரியாத புதிராக உள்ளது. நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதும் சரி நெருக்கமானவர்களை அழைக்கும் போதும் சரி டேய், மச்சி, மச்சா, மாமா மற்றும் மாப்ள என்று அழைப்பது வாடிக்கை. இன்னமும் அப்படித்தான். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக அதிகமாக இளைஞர்களிடத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை “ஜி”. வாங்க ஜி, சொல்லுங்க ஜி, அப்பிடி ஜி இப்புடி ஜி ஜி ஜி ஜி என இவர்கள் கூறுவது கேட்டு செவி அலுத்துவிட்டது. போதாகுறைக்கு திரைப்படங்களிலும் எறிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல. இந்த ஒற்றை எழுத்துச்சொல் யாருடையது? இதன் அர்த்தம் என்ன? இதை நாம் பயன்படுத்துவது சரிதானா? என்ற இத்துனை கேள்விகளுக்கும் அடிநாதம்தான் இந்தக் கட்டுரை.

Wednesday, 30 April 2014

முகுந்து வரதராசன் - உயிரல்ல வரலாறு!

முகுந்து வரதராசன் அவரது மனைவி மற்றும் மகளுடன்
காச்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர். தன் மண்ணுக்காக தன் இன்னுயிரை ஈந்த மாமனிதர். நமக்காகவெல்லாம் தான் இவர் தன் உயிரை துச்சமென மதித்து களம் கண்டவர். வாழ்க இவரது வீரம் வாழ்க இவரது புகழ்!!!

என பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முகநூல்வாதிகளும் அயராமல் தங்களது அஞ்சலியை செலுத்தும் இவ்வேளையில் உங்களுள் எழாத ஒரு சில கேள்கள் என்னுள் எழவே செய்கிறது .

Saturday, 19 April 2014

இடிந்தகரைப் பயணமும் போராட்டமும் – 1000வது நாள் !!

நண்பர்களுடன். இடமிருந்து சிரிதரன், முத்துலிங்கம், நான் மற்றும் அருள். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் படத்தினருகில்.

அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மே மாதம் 11ம் தேதியில் தனது ஆயிரமாவது நாளை எட்டுகின்றது. பலதரப்பட்ட தடைகளையும், போராட்டாங்களையும், அடக்கும்முறைகளையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்தியாகமும் செய்து இன்னமும் முன்பிருந்ததை விட பன்மடங்கு வீரியத்துடனும் போராட்டம் எந்த வன்முறையையும் சந்திக்காமல் நேர்மை குன்றாமல் 1000 வது நாளை எட்டும் இத்தருணம் நாம் அனைவரும் உற்று நோக்கவேண்டியது கடமை.

பல வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கும் இந்த போராட்டத்திற்குத்தான் இன்றளவும் விடை இல்லை. இவர்களது இந்த அறவழியிலான போராட்டம் என்று முடியும் ? கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் சாத்தியம்தானா? இவர்கள் இரண்டு ஆண்டுகளாக எப்படி தொடர்ந்து போராட முடிகிறது? இதனால் இவர்கள் பெற்றதுதான் என்ன ? என்ற கேள்விகள் எனக்குள்ளும் வந்ததுதான். அதன் விளைவாக இடிந்தகரைக்கே செல்ல எனக்கொரு வாய்ப்பு அமைந்தது.